மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை சாஸ்தா கோவில் தெருவில் இசக்கிபாண்டி(57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி பாண்டி தருவை தாமிரபரணி ஆற்றங்கரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பத்தை எதிர்பாராதவிதமாக இசக்கி பாண்டி தொட்டுள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் இசக்கி பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.