இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாகிய படம் இரவின் நிழல் ஆகும். இந்த படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இவற்றில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இத்திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆஹா கல்யாணம் வெப்தொடரில் பவி டீச்சர் எனும் கதாப்பாத்திரத்தின் வாயிலாக பிரபலமான நடிகை சகாயபிரகிடா முக்கியமான கதாப்பத்திரத்தில் நடித்து இருந்தார்.
இப்படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். இது தொடர்பாக அவர் விளக்கமளித்து இருந்தது பேசுபொருளானது. அவற்றில் “இந்தக் கதையே தனிஒருவன் பற்றியது தான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும் தான் நடந்து இருக்கிறது. அதனை ராவாகத்தான் கூறமுடியும். அதாவது ஒரு சேரிக்கு போனோம் என்றால் நாம் கெட்டவார்த்தைகளை மட்டும் தான் கேட்க முடியும். ஆகவே சினிமாவிற்காக ஏமாற்ற முடியாது” என்று அவர் பேசியிருந்தார். இவரது இந்த கருத்து பல சலசலப்பை கிளப்பியிருந்தது. அத்துடன் சேரி மக்கள் என இங்கு யாரும் தனியாக இல்லை. மனிதர்கள் அனைவருமே பொதுவாக கெட்டவார்த்தை பேசுவார்கள்.
இவற்றில் சேரி மக்கள் என்று தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது பல பேரும் கேள்வி எழுப்பிவந்த சூழ்நிலையில், இதற்கு இப்போது நடிகை சகாய பிரிகிடா மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதாவது அவர் “இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதைதான் கூறவந்தேன். ஆனால் அது அனைவரிடமும் தவறாக சென்று விட்டது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இவரின் இப்பதிவை குறிப்பிட்டு பார்த்திபனும் மன்னிப்பு கோரி இருக்கிறார். அவற்றில் பிரிகிடா சார்பில் நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 1989-ல் நடக்கும் கதை இது. 2022-ல் சேரி மக்களிடமுள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால் என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே!.. என அவர் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.