Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….. உபரிநீர் அதிக அளவில் திறப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!!

தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது.

இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், கொள்ளிடத்திற்கு 2238 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கல்லணையில் அதிக அளவில் குவிந்தனர். ஆனால் அணையில் தண்ணீர் வரத்து அதிக அளவில் இருந்ததால் காவலர்கள் மற்றும் பொதுப்பணி துறையினர் சுற்றுலாப் பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Categories

Tech |