பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை ஆளாக்கப்பட்டதில் கருவுற்றுள்ளார். இந்த நிலையில் அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம் மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் கொண்டு 20 வாரங்களை கடந்த கருவையும் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி சிறுமியின் எதிர்காலம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் 28 வாரங்கள் மூன்று நாட்கள் கடந்த கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தமிழக அரசு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து சிறுமியின் கருவை அகற்ற வேண்டும். அகற்றிய கருவை வழக்கு விசாரணைக்காக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது பற்றிய அறிக்கையை வரும் 22ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.