Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினர் இடையே மோதல்…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வாலிபர் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் நீண்ட நேரம் போராடி வாலிபரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பிறகு சிலர் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |