நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுத இருக்கின்றார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 42, 286 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். எப்போதும் போல் இந்த ஆண்டும் நீட் தேர்வு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற இருக்கின்றது. அதனால் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருக்கின்றது. இந்த சூழலில் மாணவர்களுக்கான வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது அதாவது ,
*நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகை பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
* ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரண்டு நகல்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
*பிற்பகல் 1:30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்படும் அதன் பின் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
*பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டை அவசியம்.
*மாணவர்கள் செல்போன்களில் கொண்டு வரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
*வாட்ச், பெல்ட், ஷூ, கம்மல், மூக்குத்தி, தலை கிளிப் போன்றவற்றை அணியக்கூடாது என கூறப்பட்டுள்ளது.