Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சின்னமாடன் குடியிருப்பு கிராமத்தில் தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பனை ஏறும் தொழிலாளியான விஜய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மேகலா(16) என்ற சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வெளியூருக்கு சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் மேகலாவை காணவில்லை என அவரது தந்தை சுடலைமணி நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் மேகலாவை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து ஜாமினில் வெளியே வந்த விஜய் மேகலாவுடன் மீண்டும் பேசி வந்துள்ளார்.

இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி குளக்கரையில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |