வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் “தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருபோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 200, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 600 வீதம் 3 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இத்தொகை நேரடியாக மனுதாரர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 வருடங்களுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவை புதுப்பித்தும் இருக்க வேண்டும். இதையடுத்து ஆதி திராவிடர், பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இதர பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டுவருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இதனிடையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்தஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.
மாற்றுத்திரனாளிகளுக்கு வயது, தகுதி இருப்பவர்கள் வேலைவாய்ப்பு, அடயாள அட்டை (பழையது) மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட Online: Printout ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். (அல்லது) https://tnvelaivaaippu.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்திசெய்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் போன்றோரின் முத்திரையுடன்கூடிய கையொப்பம் பெற்ற வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் கல்வி சான்றிதழ், சாதி ச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், வங்கிகணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்றவற்றுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும்” என்று அவர் கூறிஉள்ளார்.