Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை…. ராணுவம் அதிரடி எச்சரிக்கை….!!!!

இலங்கையில் அதிபர் கோத்தப்பய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக கடந்து 9ஆம் தேதி முதல் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை ஒடுக்குவதற்காக நாடும்பொழுது அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மாறாக ரணில் விக்ரம்சிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற அலுவலகத்தை கைப்பற்றி நடந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் அரங்கேறியது. இதில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என 84 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கொழுப்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

இதனையடுத்து நேற்றும் கொழும்புவின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. இதில் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார். அப்போது சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு 26 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அதனைப் போல போராட்டக்காரர்கள் தாக்கியதில் 2 ராணுவ வீரர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ராணுவ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைதியான போராட்டம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் மோதலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ராணுவ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது சொத்துக்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கான பாதுகாப்பு ஆயுதப்படைகளின் பொறுப்பின் கீழ் வருவதால், தேவைப்பட்டால் தங்கள் சக்தியை பயன்படுத்த படைகளுக்கு சட்டபூர்வ அதிகாரம் அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |