Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா…. அதிபர் எடுத்த முடிவு…. வெளியான தகவல்….!!!

பிரதமரின் ராஜினாமா கடிதத்தை அதிபர் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தாலி நாட்டின் பிரதமராக மரியா டிராகி இருக்கிறார். கடந்த வருடம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அதிபர் செர்ஜியோ மெட்டரலெல்லா, மரியா டிராகியை பிரதமராக தேர்வு செய்தார். இங்கு தற்போது பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கூட்டணி கட்சிகளால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் மரியா டிராகி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அதிபர் பிரதமரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அரசியல் நிலவரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேண்டும் என அதிபர் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |