புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கூறியும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் சென்ற 4 மாதங்களாகவே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கவில்லை, ரேஷன் கடையில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை, சாலைகள் மண்சாலைகளாகவே இருக்கின்றது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஆனால் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின் தகவல் அறிந்து வந்த கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.