Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா….. சபாநாயகர் வெளியிட்ட தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார்.

கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவை அடைய முயற்சிப்பதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. புதன் கிழமை பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோத்தபய தனது வார்த்தையைக் காப்பாற்றத் தயாராக இல்லை. மாலத்தீவில் இருந்து சவுதி விமானம் மூலம் கோத்தபய சிங்கப்பூர் சென்றார். கோத்தபய, அவரது மனைவி மற்றும் அவரது குழுவினர் வியாழக்கிழமை இரவு சிங்கப்பூர் சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகருக்கு கோத்தபய அனுப்பி உள்ளார்.

 

Categories

Tech |