Categories
மாநில செய்திகள்

7 நாள்களில் மளமளவென குவிந்த அபராதத் தொகை….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

தமிழகத்தில் தொற்றுப் பருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த ஏழு நாட்களில் மட்டும் 11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 குலுக்கல் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |