Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. இங்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டி உள்ளது.

இதனால் இரவு 8.15 மணிக்கு மீண்டும் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வால்பாறை பகுதி முழுவது விட்டு விட்டு கனமழை பெய்து வருவகிறது. கோவை மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, நாளை ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |