தவத்திரு ஊரன் அடிகள் (90) உடல் நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலமானார். திருச்சியில் பிறந்த இவர் தமிழ் சமயங்கள்,சன்மார்க்க நெறிகளை பற்றி ஆராய்ச்சி செய்து பல சமய நூல்களை வெளியிட்டவர். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலர் இன்றி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. ஊரன் அடிகளார் இறுதி சடங்குகள் வடலூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. இரங்கல்…..!!!!
