நாடு முழுவதும் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடத்திற்கு மூன்று முறை கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு கடந்த மே மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர் மட்டுமே இதை பெற தகுதியுடையவர். மேலும் அந்தோதயா ரேஷன் கார்டு சிலிண்டர் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமாக சுமார் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 142 ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.