பதிவுத்துறையில் 100 நாளில் ₹4988 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பதிவுத்துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவுத்துறை அதிக வருவாயை ஈட்டி உள்ளது. அந்த வகையில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை 100 நாட்களில் 4988.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 2,057 கோடி கிடைத்த நிலையில் தற்போது கூடுதலாக 2,410 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் பதிவுத்துறையில் அதிக வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.