Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா…. லாக்டவுன் அச்சத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமான மக்காவ் பிராந்தியத்தில் உள்ள சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

சீனா நாட்டில் உள்ள தெற்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிராந்தியம் மக்காவ் ஆகும். இது உலகின் மிகப்பெரிய சூதாட்ட தளமாக விளங்குகின்றது. இந்த மக்காவ் அரசின் வருவாயில்    80% – க்கும் அதிகமான பங்கானது இங்குள்ள சூதாட்ட விடுதிகள் மூலமே கிடைக்கிறது.

இந்நிலையில் மக்காவ் பிராந்தியத்தில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சுமார் 2½ ஆண்டுகளுக்கு பிறகு இங்குள்ள  அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டுள்ளது.

Categories

Tech |