Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலுக்குப் போனா இதை தட்டிக் கேளுங்க….. இல்லன்னா இந்த நபருக்கு கால் பண்ணுங்க….!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர்கள் முறையிடலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் உணவகங்களில் சேவை கட்டணம்  கேட்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி அப்படி கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதை நீக்க சொல்லி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது. மறுத்தால் அந்த ஹோட்டலில் நீங்கள் பெறுகிற கட்டண ரசீதை கொடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். உடனடியாக புகார்களுக்கு தேசிய நுகர்வோர் உதவி எண் 1915 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |