மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து வருவபர் பிரித்விராஜ். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் சினிமாவில் இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான “கனா கண்டேன்” படத்தின் மூலம் அறிமுகமானர். தற்போது பிரித்திவிராஜ் சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் ஷாஜி கைலாஸ் இயக்கி உள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னஸ் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இந்நிலையில் கடுமை படத்தில் “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவர்கள் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.
இந்த வசனத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது கேரளா மாநிலங்கள் ஆணையம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஷாஜி கைலாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகள் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானே அதன் மறுபக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை”என்று பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து பிரித்விராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் “மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.