Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை…. கையெழுத்திட்ட அதிபர் புதின்…. வெளியான அறிவிப்பு…..!!!!

உக்ரைனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ரஷ்யா கிட்டத்தட்ட 150 தினங்களாக அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான விரைவான பாதையை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் ரஷ்ய அதிபரான புதின் நேற்று கையெழுத்திட்டார். இதனிடையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களிலுள்ள உக்ரைனியர்கள் எளிதில் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கான விரைவு குடியுரிமை திட்டத்தை சென்ற 2019 ஆம் வருடம் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தியது.

அதனை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதையடுத்து 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மேமாதம் மேற்கு உக்ரைனிலுள்ள ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களை சேர்ந்த மக்களும் ரஷ்ய குடியுரிமையை எளிதில் பெறும் விதமாக அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் தான் உக்ரைனிலுள்ள அனைத்து மக்களும் ரஷ்ய குடியுரிமையை பெறுவதற்கு விரைவு குடியுரிமை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆணையில் புதின் கையெழுத்திட்டு இருக்கிறார்.

Categories

Tech |