இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறி விட்டதாகவும் இலங்கை அருகில் உள்ள ஒரு நாட்டில் தங்கி இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நாளை கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கை முன்னாள் மந்திரி பசில் ராஜபக்சே அமெரிக்கா தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். இதற்காக கட்டுநாயக்கா விமான நிலைய சென்ற பசில் ராஜபக்சேவின் ஆவணங்களை சரிபார்க்க விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் பசில் ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார். மேலும் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.