Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் விநியோகம் தாமதம்…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது . இந்த நோட்டு புத்தகங்கள் எண்ணிக்கை, பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவை மாணவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப மாற்றி வழங்கப்படும். இந்த நிலையில் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு இன்னும் தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இதனால் மாணவர்கள் கடைகளில் நோட்டு புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட விளக்கத்தில், இந்த வருடம் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்களை விநியோகிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. புத்தகங்கள் அச்சிடப்படும் குறிப்பிட்ட தாளின் விலை உயர்த்தப்பட்டது, தட்டுப்பாடு காரணமாக போதிய விநியோகம் இல்லாதது, நோட்டு புத்தகங்கள் அச்சிடுவதற்கான ஒப்பந்த நிபந்தனைகளில் உள்ள சில பிரச்சனைகள் ஆகியவை இந்த தாமதத்திற்கு காரணம். தற்போது வரை 70% மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நோட்டுகள் அச்சிட்டு இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரம் தொடக்கத்திற்குள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |