அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினருக்கும் அதிகாரிகள் முன்பு வருகின்ற 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் அதிமுகவில் எழுந்த மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பொது குழுவில் ஓபிஎஸ் இடம் இருந்து அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.
அதற்கான தீர்மானமும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பினரும் அதிகாரிகள் முன்பு வருகின்ற 25-ம் தேதி நேரில் ராஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருவாய் துறை சார்பாக இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.