Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கை, கால்களை துண்டித்து வாலிபர் படுகொலை…. அதிர்ச்சிடைந்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதூர் மலைமேடு மயானத்தின் அருகே கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

கடந்த மாதம் கொலை செய்ய முயன்ற கும்பலிடம் இருந்து சரத்குமார் தப்பித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சரத்குமாரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டி உடலுக்கு அருகிலேயே போட்டுவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |