Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுக்கலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிஆர்பி நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வானவர்கள் பட்டியலை சரிபார்த்து வரும் 18ஆம் தேதிக்குள் சிஏஓகள் ஒப்புதல் தர வேண்டும். தற்காலிக ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டவர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |