கடலோர காவல் படை சார்பில் 30 பேர் கொண்ட குழுவினர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமேஸ்வரம் பாலகிருஷ்ணன், நாகை சுதாகர் ஆகியோர் தலைமையில் 2 பாய்மரப்படகுகளில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரை சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொண்டு வரும் இந்த பயணத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினர். இவர்கள் நேற்று கடலூர் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதனை முன்னிட்டு அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாய்மர படகு சாகச பயண குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு அவர்கள் இரண்டு பேரும் ராமேசுவரத்துக்கு புறப்பட்டு பாய்மர படகு சாகச குழுவினரின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்ளிட்ட பலர் உடன் இருந்தார்கள். இவர்களில் கடல் பயணத்திற்கு துணையாக, 30 கடலோர காவல் படை போலீசார் தரை மார்க்கமாக வாகனங்களில் பயணம் மேற்கொள்வார்கள். மேலும் பாய்மர சாகச பயணத்தின் போது ஏதேனும் இயற்கை சீற்றங்கள், பழுதுகளோ, உதவிகளோ தேவைப்படும் பட்சத்தில், தரை மார்க்கமாக செல்லும் போலீசார் உடனடியாக செயல்பட்டு பாய்மரப் படகில் பயணம் செய்பவர்களுக்கு உதவக்கூடிய வகையில், இந்த பயணம் திட்டமிட்டுள்ளது என்று கடலோர படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.