Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏம்மா பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாகேஸ்வரி தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகேஸ்வரியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |