திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் லட்சுமணன்(72) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வஞ்சிக்கொடி(62) இவர்கள் நெருப்பெரிச்சல் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக காந்தி நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் பூபதியிடம் வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ரூ.16 லட்சத்தை லட்சுமணன் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்தார். அதனைதொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி 85% வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் புதுமனை புகுவிழா நடத்தினார். மீதமுள்ள 15% பணிகள் முடிக்கவில்லை. ஆனால் அதற்குள் வீட்டின் உள்பகுதியில் விரிசல், மாடிப்படிக்கட்டு சேதம் அடைந்தது. உடனடியாக லட்சுமணன் மற்றொரு இன்ஜினியர் மூலம் வீடு கட்டிடத்தின் தரத்தை சோதனை செய்தார்.
அப்போது அவை தரமில்லாமல் கட்டியதும், அஸ்திவாரம் ஆழம் குறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமணன் வஞ்சிக்கோடி ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்டம் நுகர்வோர் கோட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத வழக்கு தொடுத்தனர். எதிர் தரப்பில் ஆஜராகவில்லை. இதனைதொடர்ந்து தரைமற்ற கட்டிடம் கட்டிக் கொடுத்ததற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.1 லட்சம், வழக்கு செலவு தொகை ரூ.10,000 ஆகியவற்றை இன்ஜினியர் பூபதி லட்சுமணனுக்கு வழங்க நுகர்வோர் கோர்ட் தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளனர்.