Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. 5 பேருக்கு காயம்…. போலீஸ் விசாரணை….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து லாரி ஒன்று இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கணை தொப்பூர் கணவாய் வழியாக பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. இதனால் முன்னால் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காயில் ரோல் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி டிரைவர் சிவராஜ் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து கார்களில் வந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த டிரைவரை உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின் மற்ற 4 பேரையும் வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தொப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |