சிவாஜி கணேசனின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கானது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த பொழுது அக்ஷயா ஹோம்ஸ் தரப்பில் சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 வருடத்திலேயே கைமாறிவிட்டதாகவும் கட்டுமான முடிந்த பிறகும் அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில் கூறப்பட்டதாவது, பங்குகள் மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சென்ற 2010-ஆம் வருடம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. பின் மனுதாரர்களான ராஜ்வி மற்றும் சாந்தி தரப்பில் கூறியுள்ளதாவது, வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் நீதிபதி விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.