Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்…. 28,984 பேர் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் 28,984 பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யலாம். பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக் கூடாது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் நீதிமன்ற உத்தரவு படி பிறப்பிக்கப்பட்ட சுற்றுறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை 1,50,648 பேரில், 28,984 பேர்மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு நடைமுறைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |