Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை”… அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்…!!!!!

நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர்.

அதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் கடை மாற்றப்படும் வரை இந்த பகுதியில் மது அருந்த அனுமதி மறுக்கப்படும் எனவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கூறப்பட்ட பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |