Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது… லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…. 49 இடங்களில் ரெய்டு….!!!!

திருவாரூரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில் உள்ள காமராஜர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதை எடுத்து காமராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |