திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு ரேஷன் கார்டில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்கிற தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன்பெறலாம்.
அது மட்டுமல்லாமல் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செய்யம்பாக்கம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பாலவாக்கம் ஜெ ஜெ நகர் உள்ள ரேஷன் கடை அருகில், பூந்தமல்லி வட்டம் குண்டம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருத்தணி வட்டம் தாடூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பள்ளிப்பட்டு வட்டம் அத்திமாஞ்சேரி ரேஷன் கடை அருகில், பொன்னேரி வட்டம் வண்டி காவனூர் கிராம நிர்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி வட்டம் மாநியூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆவடி வட்டம் கௌசம்பாளையம் திருநின்றவூர் கிராம நிர்வாக அலுவலகம்,ஆர்கே பேட்டை வட்டம் மகான் காலிகாபுரம் ரேஷன் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது