Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவருடைய உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

அப்போது அம்பலக்காரன் கண்மாயின் வெளியே ஆனந்தின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கண்மாய்க்குள் இறங்கி தேடிய போது ஆனந்தின் உடல் கிடைத்தது. இதனையடுத்து ஆனந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |