மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் பாரதி நினைவு நகர் பகுதியில் மகமாயி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகமாயி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.