Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

லஞ்சர் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ்…. மாட்டி கொண்ட கிராம உதவியாளர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி இருக்கின்றனர். அதன்பின் ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை தொடர்பாக கேட்டறிந்தார்.

அப்போது கிராம உதவியாளர் பாட்ஷா என்ற முஜிப்பூர் ரகுமான் ரூபாய் 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனே வாரிசு சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் வாரிசு சான்றிதழ் வாங்க முடியாது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து ரவி கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் 3 ஆயிரத்தை ரவியிடம் கொடுத்து அனுப்பினர்.

அதனை தொடர்ந்து ரவி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சென்று, பாட்ஷாவிடம் ரூபாய் 3 ஆயிரத்தை கொடுத்தார். அப்பணத்தை அவர் பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் பாட்ஷாவை கையும் களவுமாக பிடித்தனர். பின் பாட்ஷாவை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |