சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.