Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு வந்த தந்தை…. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வெல்லம்சாமியார் தெருவில் ஸ்ரீமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்ரீமுருகன் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவரை பரிசோதித்து பார்த்தவர்கள் ஸ்ரீராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |