Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த மரநாய்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

வீட்டிற்குள் மரநாய்  புகுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இப்பதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென  மரநாய் ஒன்று  நுழைந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அந்த மரநாயை  பிடித்தனர். அதன் பின்னர் அந்த மரநாயை அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சததை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |