Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீன் மார்க்கெட்டில் சோதனை… 70 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!

மீன் மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.‌ அப்போது கடைகளில் விற்பனைக்காக ஐஸ்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மீன்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் மொத்தம் 70 கிலோ இருந்தது. இதன் மதிப்பு 10 ஆயிரம் ரூபாயாகும். இந்த கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 4 கடைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு மீன்களை நீண்ட நாட்கள் இருப்பு வைத்திருக்கக் கூடாது எனவும், கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Categories

Tech |