3 பெண்கள் மோட்டார் சைக்கிள்களில் பாலியல் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு செய்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்தாமரைக்குளம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்தை சேர்ந்த ஷினி ராஜ்குமார், கல்யாணி, ஜெய் ஸ்ரீ என்ற 3 பேர் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்று பிரசார பயணத்தை தொடங்கினர்.
இந்நிலையில் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யும் இவர்கள் செல்லும் வழிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.