ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்கிரனுக்கும் இடையே 131 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்கிரைனுக்கு ஏவுகணை உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்கி வருகிறது.
இந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவுக்கு சொந்தமான பெல்கொரோட் பகுதியின் மீது உக்ரைன் வீரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 40 வீடுகள் மற்றும் 21 அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.