நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்து இருக்கிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார். நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 8,000 -க்கும் மேற்பட்டோர் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து வைத்து அசத்தி அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார்.
அவர்கள் அனைவருக்கும் 2000 கிலோ மட்டன் பிரியாணி, ஆயிரம் கிலோ சிக்கன் வறுவல், கிரேவி, பத்தாயிரம் அவித்த முட்டை வழங்கப்பட்டுள்ளது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தயிர் சாதம் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு தனியாக சமையல் மாஸ்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இதனைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் வியப்பு அடைந்துள்ளார்.