Categories
மாநில செய்திகள்

அரக்கோணம் – வேலூர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரெயில்வே அறிவிப்பு….!!!!

அரக்கோணம் -வேலூரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழ்கண்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றது.

அதன்படி, அரக்கோணம்-வேலூர் இடையே காலை 7.10 மணி, மதியம் 2.05 மணிக்கும், வேலூர்-அரக்கோணம் இடையே காலை 10 மணி, மாலை 5.10 மணிக்கும், அரக்கோணம்-காட்பாடி இடையே இரவு 9 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும். காட்பாடி-அரக்கோணம் இடையே காலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |