2018 ஆம் வருடம் தான் அதிக அளவில் காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றது என்று பகிர் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காவல் நிலையங்களில் கைதி மரணங்களை தடுப்பது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வை கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை தெப்பக்குளம் தனியார் கல்லூரியில் காவல் நிலைய மரணம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது, அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் காவல் நிலையத்தில் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 84 மரணங்கள் அரங்கேறி இருக்கிறது. மேலும் கடந்து 2018 ஆம் வருடம் முதல் 18 காவல் நிலையம் மரணங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றது. இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பன்னிரண்டு வழக்குகள் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இனி ஒருவர் கூட காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என அவர் கூறியிருக்கிறார்.