Categories
மாநில செய்திகள்

இனி இ-சேவை மையங்களில்….. இந்த சான்றிதழையும் வாங்கலாம்….. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்னாளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான அரசு இ சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல இ சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றன.

இந்நிலையில் இனி இ சேவை மையங்களில் திருமண சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருமண பதிவு செய்யவும், சமூக நலத்துறையின் உதவியை பெறவும் விஇஒ-கள் இனி திருமண சான்று வழங்கக்கூடாது என வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கோவில் நிர்வாகமும் இனி விஏஓக்களிடம் சான்று பெற்று வருமாறு கேட்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இ சேவை மையங்களில் வாயிலாக திருமண சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |