Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களே…..! “குலுக்கல் மூலம் பரிசு”…. வெளியான சூப்பர் ஹாப்பி நியூஸ்….!!!!

மெட்ரோ ரயில்களில் அதிகபட்சமாக பயணம் செய்த பயணிகளுக்கு குழுக்கள் பரிசானது நந்தனம் ரயில் நிலையத்தில் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் வரையிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி மூன்றாவது மாதம் மாதாந்திர அதிர்ஷ்ட குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இதனை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தொடங்கி வைத்து குலுக்கல் மூலம் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அடுத்த மாதத்திற்கான குழுக்கள் இம்மாத இறுதியில் நடத்தப்படும். பரிசு விவரங்களை தெரிந்து கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாடுகளாளர்களையும் அணுகலாம். மெட்ரோ ரயில் அதிக அளவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் இதில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |