Categories
தேசிய செய்திகள்

“கடனுக்கு உணவு தராததால் இனிப்பு கடை மீது ஆசிட் வீச்சு”….. 7 பேர் காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஆசிட் வீச்சில் 7 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடைக்காரர் தனக்கு கடனுக்கு உணவு தர மறுத்ததால், இனிப்பு கடை மீது ஒருவர் ஆசிட் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் ஜெர்முடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் நடந்துள்ளது.

கடைக்காரர் தனக்கு உணவு தர மறுத்ததையடுத்து, கடைக்குள் ஆசிட்டை வீசியதில் 7 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிமையாளரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Categories

Tech |